Friday, August 27, 2010

மரபுக் கவிதை - 105




முருகன் பெருமை




முருகா உன் புகழ்தனையே பாட முடியுமா?
...............முத்தமிழின் முதல்வா, என் குறையைப் போக்க வா!
சருகானேன் உனையெண்ணி சண்முகநாதா!
...............சங்கடத்தைத் தீர்த்திடவே சடுதியில் வாராய்!
(முருகா)
திருக்கயிலை வாசனுடைய குருவாய் ஆனாய்!
...............தினையுண்ணும் குறத்திக்கு கணவனும் ஆனாய்!
கருநீலக் கண்ணனுடைய மருகன் ஆனாய்!
...............கந்தா உன் தத்துவத்தை விளக்க முடியுமா?
(முருகா)
நான்முகனின் கர்வத்தைக் குட்டி ஒழித்தாய்!
...............நாசஉரு அரக்கர்களை நடுங்கிடச் செய்தாய்!
வேண்டியவர் குறை நீக்க வேலைத் தாங்கினாய்!
...............வேதங்களும் புகழுகின்ற முருகா! முருகா!
(முருகா)
எழுதிய நாள்: 28.06.1988
.

No comments:

Post a Comment