Sunday, August 29, 2010

சிந்தனைக்கு




பாரதி அமுதம்



வெள்ளை நிறத்தொரு பூனை -எங்கள்
.....வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை- அவை
.....பேருக் கொரு நிறமாகும்;

சாம்பல் நிறமொரு குட்டி- கருஞ்
.....சாந்தின் நிறமொரு குட்டி,
பாம்பின் நிறமொரு குட்டு- வெள்ளைப்
.....பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந்தாலும் -அவை
.....யாவும் ஒரே தரமன்றோ?
இந்த நிறம் சிறிதென்றும் - இஃ
.....தேற்றமென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
.....மானிடர் வேற்றுமை இல்லை;
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு
.....யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்!...

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு
.....உண்மை தெரிந்தது சொல்வேன்...

-மகாகவி பாரதி
(முரசு)
.

No comments:

Post a Comment