Saturday, August 14, 2010

வசன கவிதை - 73



உண்மையாய் வா!


பெருமைக்காக
காஷ்மீரில் ஊடுருவும்
சகோதரனே
பிரிவினையின் வேதனையை
உணர்ந்து பார்.

அமைதிக்காக
புறாக்களைப் பறக்கவிடும்
அன்பார்ந்த தன்மையை
அலட்சியப்படுத்தாதே,
அண்டைவீட்டானே!
'போக்ரான்' சக்திஸ்தலமும்
எங்களது தான்.

ஒற்றுமைக்காக
சமரசத்தை விழையும்
சகிப்புத்தன்மையை
சாதாரணமாய் நினைக்காதே!
சிறிது சிந்தி-
டிச. 6ஐ.

நட்புக்காக ஆரத்தழுவும்
பரந்த மனப்பான்மையை
பாழாக்க முயலாதே!
எம் கரங்களில்
'கார்கில்' நகங்களும் உண்டு.

ஏ, சகோதரனே!
வட்டமிடும் வல்லூறு
வல்லரசுகளுக்கு மத்தியில்
வண்ணமாய் மிளிரும்
பாரதத்தைப் பார்!
இனியேனும் உன்
பொறாமை அழுக்குகள்
பொசுங்கிப் போகட்டும்!

உலகுக்காக
ஒப்பந்தம் செய்வதால்
ஒரு பயனுமில்லை,
உண்மையாய் வா
சகோதரா!
உருக்கென இணைவோம்!
உவப்பாய் வாழ்வோம்!


நன்றி: விஜயபாரதம்
ó

No comments:

Post a Comment