Tuesday, August 24, 2010

வசன கவிதை - 77



ராக்கி



இந்த சின்ன நூல் கயிறா
நம்மை ஒன்றுபடுத்துகிறது?

சாதிகளால் பிளக்கப்பட்ட,
மொழிகளால் சிதைக்கப்பட்ட,
மதங்களால் காயம்பட்ட,
பரந்த பாரத தேசத்தை
இந்த சின்ன நூல் கயிறா
ஒன்றுபடுத்துகிறது?

பிணைக்கும் சக்தி
உருவத்தில் இல்லை;
பிணைப்பின் வலிமை
கட்டப்படும் பொருளிலும் இல்லை.
வாமனனின் சிறப்பு
பாரதத்துக்கு தெரியும்.

முத்தத்தில் வெளிப்படும்
தாயின் அன்பு போல,
ராக்கியில் வெளிப்படுகிறது
சகோதரத்துவ நேசம்.
எல்லைகளை உடைத்து
மூவுலகாளும் வல்லமை
அன்பிற்கு உண்டு.

வாருங்கள்!
ராக்கி கட்டிக் கொள்ளுங்கள்;
ராக்கி அணிவியுங்கள்!
விதைக்குள் உறங்கும்
விருட்சமாய் மாறுங்கள்!
நாட்டைப் பிணைக்கும்
ராக்கியாகவே மாறுவீர்கள்!
இன்று ரக்ஷா பந்தன் தினம்.
.

No comments:

Post a Comment