
Friday, April 30, 2010
Thursday, April 29, 2010
Wednesday, April 28, 2010
Tuesday, April 27, 2010
Monday, April 26, 2010
Sunday, April 25, 2010
Saturday, April 24, 2010
Friday, April 23, 2010
Thursday, April 22, 2010
Wednesday, April 21, 2010
Tuesday, April 20, 2010
Monday, April 19, 2010
ஏதேதோ எண்ணங்கள்

'உலகத்தின் எந்த ஒரு மூலையில் ஹிந்து ஒருவன் பாதிக்கப்பட்டாலும் உன் உள்ளத்தில் வேதனை ஏற்பட வேண்டும்; அப்போதுதான் நீ ஹிந்து ஆவாய்' என்று சொன்ன விவேகானந்தரை மனதில் இருத்தி, பிஜித்தீவு தமிழருக்காக இரங்கிப் பாடிய மகாகவி பாரதியை வணங்கி, இதைத் தொடங்குகிறேன்.
Sunday, April 18, 2010
படக் கவிதை - 02

Saturday, April 17, 2010
உருவக கவிதை - 42

Friday, April 16, 2010
வசன கவிதை - 55

நன்றி: விஜயபாரதம் (30.07.2010)
.
Thursday, April 15, 2010
Wednesday, April 14, 2010
வசன கவிதை - 54

இரணியன் உத்தரவு
இனிமேல் சித்திரையில் தான் பொங்கல்.
சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் கூட
சித்திரைப் பொங்கல்
பாடப்பட்டிருக்கிறது.
இனி, சித்திரைப் பொங்கல்
கொண்டாடுங்கள்.
கூடவே -
உங்கள் பெற்றோர் வைத்த பெயரை
மாற்றிக் கொள்ளுங்கள்!
முடியாவிட்டால்,
பெற்றோரையே மாற்றி விடுங்கள்!
இனிமேல் ஐப்பசியில்
தீபாவளி கொண்டாடாதீர்கள்.
நரகாசுரன் பிறந்த நாளை
தெரிந்தால் கொண்டாடுங்கள்.
தெரியாவிட்டால்,
என் பிறந்த நாளையே
கோலாகலமாகக் கொண்டாடுங்கள்!
கூடவே -
திரையிசைக் கவிமணிகள் பாடிய
தாளஇசைக் கவிகளை
இனமானத்துடன் பாடுங்கள்!
இனிமேல் புத்தாண்டு
தைத் திங்களில் தான்.
கொண்டாட விருப்பம் இல்லாதவர்கள்,
ஜனவரி முதல் நாளைக்
கொண்டாடுங்கள்.
ஆனால்,
சித்திரை முதல் நாளில்
தவறியும் கோயிலுக்கு
சென்று விடாதீர்கள்.
பொங்கல் வைக்கும் நாளில்
யாரேனும்
புத்தாண்டு கொண்டாடலாமா?
பகுத்தறிவைப் படையலிட
பார்த்திருக்காது கழகம்!
அனைவருக்கும் இனிய 'விக்ருதி'
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Tuesday, April 13, 2010
மரபுக் கவிதை - 98

Monday, April 12, 2010
மரபுக் கவிதை - 97

புத்தாண்டை நோக்கி...2
விதி புதிதாய்ச் செய்திடுவோம்!
இயற்கையெனும் அருட்கொடையின் இனிய வரம் இவ்வுலகம்!
தன் கடமை மறவாமல் தளராமல் உருள்கிறது!
உலகிதனின் கடும் உழைப்பால் உருவாகும் இரவு பகல்!
பயன் கருதா படும் பாட்டால் பருவநிலை மாற்றங்கள்!
கதிரவனை புவி சுற்றும் காலம் தான் ஒரு வருடம்!
புத்தாண்டு பிறப்பதனால் பூரித்து மகிழ்கின்றோம்!
புத்தாண்டாம் இன்றேனும் புதுமையுறச் சிந்திப்போம்!
நாட்களெல்லாம் தினத்தாளாய் நகர்வதுவா புத்தாண்டு?
மானிடரின் வாழ்வுக்கு மதிப்பளிக்கும் செயலென்ன?
சிந்தித்து முடிவெடுப்போம்! சீக்கிரமாய்ச் செயல்படுவோம்!
தனக்காக வாழாமல் தன் கடமை ஆற்றுகிற
புவித்தாயைப் போற்றிடுவோம்! புதல்வர்களாய் நடை பயில்வோம்!
கணமேனும் துஞ்சாமல் கருத்தாக உருளுகிற
நிலமகளின் செயல்பாட்டை நியமமெனக் கொண்டிடுவோம்!
சளைக்காத உழைப்பாலே, சமர்ப்பண நல்நோக்காலே
விளையாத புதுமை எது? விதி புதிதாய்ச் செய்திடுவோம்!
இல்லாமை ஒழியட்டும்! இனிதெங்கும் பரவட்டும்!
பொல்லாங்கு அழியட்டும்! பொது உலகம் மலரட்டும்!
நல்லோர்தம் சிந்தனைகள் நாடெங்கும் சூழட்டும்!
வல்லமையும் பெருகட்டும்! வளமெங்கும் ஓங்கட்டும்!
சித்திரையை வரவேற்கச் செய்திடுவீர் இச்சபதம்!
நித்திரையைப் போக்கிடுவோம்! நியமத்தைக் காத்திடுவோம்!
(நாள்:12.04.2002)
நன்றி: தினமலர் (ஈரோடு - 14.04.2002)
.
Sunday, April 11, 2010
மரபுக் கவிதை - 96

Saturday, April 10, 2010
மரபுக் கவிதை - 95

Friday, April 9, 2010
மரபுக் கவிதை - 94

Thursday, April 8, 2010
மரபுக் கவிதை - 93

Wednesday, April 7, 2010
மரபுக் கவிதை - 92

Tuesday, April 6, 2010
மரபுக் கவிதை - 91

Monday, April 5, 2010
மரபுக் கவிதை - 90
Sunday, April 4, 2010
வசன கவிதை - 53

புத்தாண்டை நோக்கி...10
அவலச்சுமை
இன்னும்
104 நாட்கள் இருக்கிறது*
புத்தாண்டு பிறக்க.
ஒரு நாளுக்கு
24 மணி நேரம்.
ஆக மொத்தம்
2596 மணி நேரம்
கழிந்தாக வேண்டும்.
ஒரு மணி நேரத்துக்கு
3600 வினாடிகள்.
104 நாட்களுக்கு
நீங்களே
கணக்கு போட்டுக்
கொள்ளுங்கள்.
அதற்குள் இப்படி
அவசரப்பட்டால்
எப்படி?
காலண்டரை
மாற்றிவிடுவதால்
புத்தாண்டு பிறந்து விடுமா?
கிழிந்துபோன
தாள்களில்
கழிந்துபோன
நாள்கள்
இருந்தன.
நாளுக்கு
அவ்வளவு தானா
மரியாதை?
இறந்தகாலத்தை
போகியிட்டு
புத்தாண்டில்
பொங்கலிட முடியாது.
இறந்த காலம் தான்
அனுபவம்.
காலச்சக்கரத்தின்
சரித்திரம்.
அடிமைத் தளையை
அறுப்பதற்காக
ஆருயிர்த் தியாகியர்
ஆகுதியானது
நமது சரித்திரம்.
ஆயினும் அழுத்துகிறது-
அவலச்சுமையாய்
ஆங்கிலப் புத்தாண்டு.
பழைய தாள்களை
பறக்க விட்டதால்
வந்த வினை இது.
பஞ்சாங்கம் போல்
பாதுகாத்திருந்தால்
பரிதாபச்சூழல்
நேர்ந்திருக்காது.
வீட்டுப்பரணில்
தாத்தா காலப் பெட்டியில்
செல்லரித்துக் கிடக்கிறது -
60 வருடப்
பஞ்சாங்கம்.
தூசு தட்டுங்கள்.
பாதுகாப்பாக
பத்திரப் படுத்துங்கள்.
இன்னும்*
104 நாட்கள் இருக்கிறது
புத்தாண்டு பிறக்க.
அதற்கு இப்போதே
தயாராகுங்கள்!
(நாள்: 17.12.03)
.
Saturday, April 3, 2010
புதுக்கவிதை - 87
Friday, April 2, 2010
புதுக்கவிதை - 86
ஈன்ற வலி
தொலைதூர தேசத்தில்
பெற்ற மகன்.
முதியோர் இல்லத்தில்
பெற்ற வயிறு.
ஈன்ற பொழுதினும்
வலி வேறெது?
.
Thursday, April 1, 2010
புதுக்கவிதை - 85
குரோமசோம்
'உங்களுக்கு
ஒன்றும் தெரியாது'
சொல்கிறாள் மகள்.
எப்போதோ
என் தந்தையிடம்
நான் சொன்ன
அதே ஏற்ற இறக்கத்துடன்
சொல்கிறாள்
மகள்.
.
ஏதேதோ எண்ணங்கள்
