Saturday, April 10, 2010

மரபுக் கவிதை - 95


புத்தாண்டை நோக்கி...4

இறைவனிடம் பிரார்த்திப்போம்!

விக்கிரம செல்கிறது
விஷு வருடம் வருகிறது.
வருடங்கள் மாறுவதால்
வாழ்க்கைக்குப் பயனென்ன?
வயதொன்று கூடுவதால்
வரப்போகும் பலனென்ன?

ஆண்டுகள் கழிகையிலே
அனுபவமும் பெருகட்டும்!
அனுபவமும் படிப்பினையும்
அடிப்படையாய் அமைந்தால் தான்
வாழ்வினிலே உயர்வு வரும்!
வையகமும் மகிழ்வு பெறும்!

பொருந்தாத கூட்டணிகள்,
புயல் காற்று, பூகம்பம்,
கலவரங்கள், இழப்புக்கள்,
கவலை தரும் ஊழல்கள்,
பயம் காட்டும் போர்ச்சூழல்,
பரிதவிக்கும் மனித இனம்!

இத்தனையும் இருந்தாலும்
இனிப்புக்கும் பஞ்சமில்லை!
விண்வெளியில் முன்னேற்றம்,
விளையாட்டில் சாதனைகள்,
பெருக்கெடுத்த தேசபக்தி,
பெருமிதமும் நமக்குண்டு!

நல்லவர்கள் முன்னணிக்கு
நாட்டினிலே வரும்போது
வல்லமை தான் கூடாதா?
வாட்டம் தான் நீங்காதா?
எதிர்காலம் இனிதாக
இறைவனிடம் பிரார்த்திப்போம்!
(நாள்: 11.04.2001)

No comments:

Post a Comment