Tuesday, April 6, 2010

மரபுக் கவிதை - 91


புத்தாண்டை நோக்கி... 8

சுக்கில வருஷ!

மடை திறக்க, வெள்ளம் வர, மாரியெனப் பொழிந்திடு நீ!
படை சிறக்க, பண்புடனே, பவனியென வந்திடு நீ!
தடை இறக்க, தன்மானத் தெளிவுடனே எழுந்திடு நீ!
சடை பறக்க ஆடுகிற சக்திபதி காத்திடவே!

இடையினிலே வந்திட்ட இழிப்பெயரைப் போக்கிடு நீ!
விடை கொடுத்த 'விபவ'வுடை வீதியிலே நடையிடு நீ!
நடை பயிலும் தீமைகளை விடை கொடுத்து விரட்டிடு நீ!
குடைஎனவே கிரிபிடித்த குழலரசன் காத்திடவே!

கொடை சிறக்க, கோ உயர, கோயிலென வெளிப்படு நீ!
உடைப்பெடுத்த ஒற்றுமையை ஒன்றாக இணைத்திடு நீ!
முடை குறைத்து, முழுமை பெற முனைப்புடனே செயல்படு நீ!
கடைக் கண்ணால் எரித்திடும் நங்காளியவள் காத்திடவே!

(நாள்: 14.04.1989)

No comments:

Post a Comment