Saturday, April 17, 2010

உருவக கவிதை - 42


'ஜாதி'க்கலாம்!


நாவிதனாய் இருந்தால்
சவரம் செய்யலாம்.
மருத்துவனாய் இருந்தால்
சிகிச்சை அளிக்கலாம்.
ஷத்திரியனாய் இருந்தால்
வீரனாகலாம்.
செட்டியாய் இருந்தால்
கடை நடத்தலாம்.
பார்ப்பானாய் இருந்தால்
வேதம் ஓதலாம்.
ஆசானாய் இருந்தால்
கற்பிக்கலாம்.
கள்ளனாய் இருந்தால்
கன்னமிடலாம்.
அமைச்சராக இருந்தால்
ஊழல் புரியலாம்.
அவரே-
தலித்தாக இருந்தால்
தப்பிக்கலாம்!

.

No comments:

Post a Comment