Wednesday, April 7, 2010

மரபுக் கவிதை - 92


புத்தாண்டை நோக்கி... 7

சித்திரை வருகுது!

சுக்கில வருஷம் சுபமாய்க் கழிந்தது...
சக்தி பெருகிட, சாதனை வளர்ந்திட,
பக்தி பரவிட, பண்புகள் ஓங்கிட,
யுக்தி சிறந்திட, யுவக்களை பரவிட,
வக்கிரம் அழிந்திட, வல்லமை வென்றிட,
சுக்கில வருஷம் சுபமாய்க் கழிந்தது.
***
பிரமனின் தூதென புதியது வருகுது...
கரமது குவித்திடு - கடவுளை வேண்டிட!
எப்பொழுதும் பகை எதிரினில் சிதறிட,
இப்பொழுதை விட மேன்மைகள் ஓங்கிட,
வான்மழை வைத்திட, வாய்மை வளர்ந்திட,
ஈன்றவர் மகிழ்ந்திட- இளைஞர்கள் உயர்ந்திட,
நட்பு பெருகிட- நன்மைகள் நாடிட,
லட்சியம் உயர்ந்திட , நாடு சிறந்திட,
கரமது குவித்திடு! கடவுளை வேண்டிடு!
பிரமனின் தூதென புதியது வருகுது!
(நாள்: 14.04.1990)

No comments:

Post a Comment