Tuesday, April 13, 2010

மரபுக் கவிதை - 98


புத்தாண்டை நோக்கி... 1

தாரண வருக!

ஒவ்வொரு நாளும் புது வாழ்நாளே!
ஒவ்வோர் ஆண்டும் புத்துயிர் ஆண்டே!
இதுவே நமது இந்து தத்துவம்!
இறைவன் படைப்பின் இனிய விளக்கம்!
சுபானு வருஷம் சுகமாய்க் கழிந்தது!
சுதேசி சிந்தனை சுடரென ஒளிர்ந்தது!
தர்மம் ஓங்கிட, தரணி சிறந்திட,
தாரண வருஷம் தழைத்து வருகுது!
கடந்த நொடியில் கடைந்த அனுபவம்
வருங்காலத்தின் வழி காட்டட்டும்!
நிகழ்காலத்தில் நிஜமாய் வாழ்வோம்!
நித்தியமான நிலைபேறடைவோம்!
(நாள்: 01.04.2004)
.

No comments:

Post a Comment