Wednesday, April 14, 2010

வசன கவிதை - 54


இரணியன் உத்தரவு



இனிமேல் சித்திரையில் தான் பொங்கல்.
சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் கூட
சித்திரைப் பொங்கல்
பாடப்பட்டிருக்கிறது.
இனி, சித்திரைப் பொங்கல்
ொண்டாடுங்கள்.
கூடவே -
உங்கள் பெற்றோர் வைத்த பெயரை
மாற்றிக் கொள்ளுங்கள்!
முடியாவிட்டால்,
பெற்றோரையே மாற்றி விடுங்கள்!

இனிமேல் ஐப்பசியில்
தீபாவளி கொண்டாடாதீர்கள்.
நரகாசுரன் பிறந்த நாளை
தெரிந்தால் கொண்டாடுங்கள்.
தெரியாவிட்டால்,
என் பிறந்த நாளையே
கோலாகலமாகக் கொண்டாடுங்கள்!
கூடவே -
திரையிசைக் கவிமணிகள் பாடிய
தாளஇசைக் கவிகளை
இனமானத்துடன் பாடுங்கள்!

இனிமேல் புத்தாண்டு
தைத் திங்களில் தான்.
கொண்டாட விருப்பம் இல்லாதவர்கள்,
ஜனவரி முதல் நாளைக்
கொண்டாடுங்கள்.
ஆனால்,
சித்திரை முதல் நாளில்
தவறியும் கோயிலுக்கு
சென்று விடாதீர்கள்.
பொங்கல் வைக்கும் நாளில்
யாரேனும்
புத்தாண்டு கொண்டாடலாமா?
பகுத்தறிவைப் படையலிட
பார்த்திருக்காது கழகம்!


அனைவருக்கும் இனிய 'விக்ருதி'
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!




No comments:

Post a Comment