Thursday, January 21, 2010

வசன கவிதை - 40


அன்பை நேசியுங்கள்!

அன்பை விளையுங்கள்
அன்பை செலவு செய்யுங்கள்
அன்பை சேமியுங்கள்
அன்பையே பயன்படுத்துங்கள்
அன்பை நேசியுங்கள்!

இருகைகளிலும் ஐஸ்க்ரீம் வழிய
கால் ஷூவால் பொம்மையை எட்டி உதைக்கும்
அந்தப் பகட்டுக் குழந்தையின் கண்களில்
பரிதவிக்கும் சோகம்- ஏன்?

அதோ அந்த சேரிக் குழந்தையின்
சிரிப்பிலேயே ஒரு முழுமை.
நெருஞ்சிமுள் தடத்தில் கால் பதிய நடந்து
சிணுங்கும் அதன் கைகளில் பம்பாய் மிட்டாய்.
என்ன காரணம்?

பகட்டுப் போர்வையால் மூடப்பட்ட
பெற்றோரிடம் கிட்டாத பாசம்;
பஞ்சடைத்துப் போனாலும் பரிவோடு
தலை வருடும் கரங்கள்.
இவையே அடிப்படைகள்.

நிலையில்லாத பொருளால்
நிம்மதி நிலைக்காது.
நிலையானது அன்பு;
என்றும் அழியாதது பாசம்.
எல்லோருக்கும் தேவைப்படுவது
இந்த அடிப்படை தான்.
எனவே நேசியுங்கள்-
அன்பை-
மீண்டும், மீண்டும்.

.

1 comment:

sathishsangkavi.blogspot.com said...

//நிலையில்லாத பொருளால்
நிம்மதி நிலைக்காது.
நிலையானது அன்பு;//

அன்பு மட்டுமே நிலையானது...

Post a Comment