Sunday, January 24, 2010

உருவக கவிதை - 25



சதுரங்கச் சிப்பாய்கள்

பணியிட மாற்றம் கோரும்
ஊழியனின் வலியும் சூழலும்
ஊதியம் வழங்குபவருக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை.

பெரும் முதலிட்டு
நிறுவனம் அமைத்த
முதலாளியின் திட்டங்கள்
தொழிலாளிக்குப் புரிவதில்லை.

இரண்டும் நிகர்-
எதெரெதிர் துருவ அளவில்.
வர்ர்க்க வேற்றுமையின் வேதனை-
அண்டிப் பிழைக்கும்
தொழிலாளிக்கே என்றும்.

காசை விட்டெறிந்தால்
யாரும் சேவகம் செய்யலாம்.
கால் நோக நடந்தால்
எங்கும் வேலை செய்யலாம்.

சதுரங்க நகர்த்தல்களின்
பூடகம் அறியாத சிப்பாய்கள்.
எண்திசைகளிலும்
ஆதிக்கமாய் ஊடுருவும்
ராணிகள்.
கையாலாகாமல்
வேடிக்கை பார்க்கிறது
ராஜ சமூகம்.

எதிரணியுடன் தான்
மோதல் என்றில்லை.
முதலாளி- தொழிலாளிகளின்
சதுரங்க வாழ்வில்.

யூகமும்
வியூகமும் மறந்த
வேகமான நகர்த்தல்கள்...
பலியாகின்றன சிப்பாய்கள்.
இறுதியில்
ராணியும்,
வேடிக்கை பார்த்த ராஜாவும்.

* இக்கவிதை நண்பரும் பிரிகால் தொழிற்சங்க பிரமுகருமான ஸ்ரீ லக்ஷ்மண நாராயணன், கோவை - அவர்களுக்கு சமர்ப்பணம்.
.

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

//யூகமும்
வியூகமும் மறந்த
வேகமான நகர்த்தல்கள்...
பலியாகின்றன சிப்பாய்கள்.
இறுதியில்
ராணியும்,
வேடிக்கை பார்த்த ராஜாவும்.//

நச் வரிகள்...

நண்பருக்கு எனது வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்.....

Unknown said...

anbu nanbarae thangal kavithai nandraga irunthathu,samadharma samoogam vara mananilai matram veandum...Laxmn,cbe

Post a Comment