Wednesday, June 30, 2010

உருவக கவிதை - 50



பகுத்தறிவற்ற மரங்கள்



உடனே வெட்டச் சொன்ன
அண்டை வீட்டுக் காரனுக்கே
தினமும் தேங்காய் தருகிறது
என் வீட்டு தென்னை மரம்.

முதல் கனிகளை
அணிலுக்கே தருகிறது
தினசரி நீர் பாய்ச்சி
நான் வளர்த்த கொய்யா மரம்.

மதிலில் விரிசலிட்டு
வீட்டிலும் வேரோடுகிறது
வாசல் முன் நிழலுக்காக
நட்டுவைத்த வேப்ப மரம்.


எல்லாவற்றையும் வெட்டிவிட்டு
வளர்க்க வேண்டும்
தொட்டியில் வளரும்
குட்டை மரம்.
.

No comments:

Post a Comment