Tuesday, June 29, 2010

உருவக கவிதை - 49



தூங்குமூஞ்சி நகரம்


இரவானால் கூம்பும்
தூங்குமூஞ்சி மரங்கள்
சாலையின் இருபுறமும்.

இரவெல்லாம் கண்விழித்து
பகலில் கண்ணயரும்
எவருக்கும் தெரியாது
தூங்குமூஞ்சி மரங்களின்
துடிப்பான இயக்கம்.

பகலில் கிளை ஆட்டி
குதூகலிக்கும் மரமா
இரவில் தூங்குகிறது?

எப்போதும் மயக்க நிலையில்
இயங்கும் மனிதருக்கு
தெரிவதில்லை
தூங்குமூஞ்சி மரங்களின்
கனவற்ற உலகம்.
.

No comments:

Post a Comment