Monday, June 28, 2010

உருவக கவிதை - 48



திரும்பும் சரித்திரம்...


ஓராண்டுக்கு முன்...
திருவிழா முடிந்த நகரம் போல
காட்சி அளிக்கிறது
போரில் வீழ்ந்த கிளிநொச்சி.
எங்கும் பரந்து கிடக்கின்றன
சிதிலமான பொருட்கள்,
உடைந்த, உருக்குலைந்த
தளவாடங்கள்.

ஓராண்டுக்குப் பின்...
போரில் வீழ்ந்த முல்லைத்தீவு போல
காட்சி அளிக்கிறது
செம்மொழி மாநாட்டுத் திடல்.
எங்கும் பரந்து கிடக்கின்றன
மக்கள் உபயோகித்து வீசிய
கழிவுப் பொருட்கள்,
பாலித்தீன் பைகள், காகிதங்கள்,
அறுந்த செருப்புக்கள்...

.

No comments:

Post a Comment