Thursday, June 24, 2010

மரபுக் கவிதை - 99




செம்மொழியின் காதலன்



கண்ணனின் தாசனாய்ப் பெயர் புனைந்து
கடவுளின் தத்துவம் விளங்க வைத்து,


கன்னலின் சாறெனக் கவி புனைந்து
காவிய கண்ணியம் உணரச் செய்து,


திண்ணிய நூல்களை எழுதிவைத்து
திகைப்புறு தன்கதை நிலைகள் சொல்லி,


மண்டிய அரசியல் சேற்றினிலே
மலர்ந்திடு பங்கய மணம் பரப்பி,


தன்னது வாழ்வினைச் சுட்டிக்காட்டி
தவறான துணிச்சலை மறுக்கவைத்து,


தென்றலின் தேரென பவனி வந்து
தெவிட்டாத நற்றமிழ்க் கவிதை பெய்து,


மின்னலின் வேகமாய்ப் பிறந்திறந்து
மிளிர்ந்திடு ரத்தின ஒளி விரிந்து,


சென்றவர் புகழினை நினைந்து காண
செழிப்புறு பற்பல நூல் பிறக்கும்.



குறிப்பு: இன்று கவியரசர் கண்ணதாசனின் 83-வது பிறந்த நாள்.


.

No comments:

Post a Comment