Friday, June 18, 2010

வசன கவிதை - 69



செம்மொழி மாநாட்டை நோக்கி...18


எல்லோரும் வாங்க!



எல்லா அமைச்சர்களும்
கோவையில் முகாம்.
எல்லா அதிகாரிகளும்
கோவையில் முடுக்கம்.
எல்லா ஊர்களிலிருந்தும்
காவலர்கள் வருகை.
எல்லா ஊர்களிலிருந்தும்
துப்புரவுப் பணியாளர்கள் விஜயம்.
எல்லா மாவட்டங்களிலிருந்தும்
பேருந்துகள் வருகின்றன.
எல்லாப் பகுதியிலும் மின்வெட்டு-
கோவை தவிர.
எல்லாப் பகுதியிலும் வறட்சி-
கோவை தவிர.
ஆகவே
செம்மொழி மாநாடு
நடைபெறும் கோவைக்கு
வாரும் ஜெகத்தீரே!
வந்து தீரணும் ஜெகத்தீரே!
.

No comments:

Post a Comment