Tuesday, June 8, 2010

வசன கவிதை - 62


செம்மொழி மாநாட்டை நோக்கி...8

நெருடல்


அலங்கார ஊர்திகள்
அணிவகுக்கின்றன-
செம்மொழிப் பேரணியில்.

ஐவகை நிலங்கள்
கடையெழு வள்ளல்கள்
சங்கப்புலவர்கள்
முப்பெரும் வேந்தர்கள்
காப்பியக் காட்சிகள்
வரலாற்று நிகழ்வுகள்
சமூக மாற்றங்கள்
எல்லாவற்றையும்
சித்தரிக்கும்
'இனியவை நாற்பது'
அணிவகுப்பு.

எனினும் ஒரு நெருடல்-
புறநானூற்றுத் தாயின்
மறக்களக் காட்சி
சமீபத்தில் நிகழ்ந்த
'இன்னா நாற்பது' அல்லவா?

இனியவை நினைக்க...
இன்னா மறக்க...
இது தானே நமது
செம்மொழிப் பண்பாடு?
.

No comments:

Post a Comment