Tuesday, June 1, 2010

ஏதேதோ எண்ணங்கள்



செம்மொழி மாநாட்டை நோக்கி...


அன்பு நண்பர்களே,
வணக்கம்.

தமிழ்நாட்டில் எல்லாருக்கும் எல்லா வசதிகளும் கிடைத்துவிட்டன; உலகம் முழுவதும் தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். எனவே இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தான் பேச வேண்டிய ஒரே விஷயம்.
தமிழ்நாடு முழுவதும் இப்போது மக்கள், அரசு, ஊடகங்கள் அனைவரும் ஒரே சிந்தனையாக இருக்கும் செம்மொழி மாநாடு வெல்ல, நானும் முயற்சி செய்ய வேண்டாமா? அதற்காகத் தான் இந்தக் கவிதைத் தொடர். (சத்தியமாக இதை மண்டபத்தில் யாரும் எழுதித் தரவில்லை).

தமிழக முதல்வர் அடியொற்றி, அவரது பாணியிலேயே;;;;;; இக்கவிதை யாக்கப் பட்டுள்ளது. இனி எனது வலைப்பூவில், மாநாடு முடியும் வரைக்கும், மற்ற சமூகப் பிரச்னைகளை ஒத்திவைத்து, செம்மொழி புராணம் பாடத் திட்டமிட்டிருக்கிறேன். ஏனெனில், எனது வலைப்பூவுக்கு அரசு விளம்பரம் தேவைப்படுகிறது.

இக்கவிதையை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவினால், அரசு விளம்பரத்துக்கு இணையாக உங்களையும் கருதி தன்யன் ஆவேன்.
நன்றி.
- என்றும் உங்கள்
வ.மு.முரளி

No comments:

Post a Comment