Sunday, June 6, 2010

வசன கவிதை - 60

செம்மொழி மாநாட்டை நோக்கி...6

வரையாத ஓவியங்கள்


கோவையே வண்ணமயமாகிறது.
எல்லாப் பெருமையும் செம்மொழி மாநாட்டுக்கே.

பொதுச் சுவர்கள், ஓவியங்களால் மிளிர்கின்றன.
ஆபாசச் சுவரொட்டி ஒட்டிய இடங்களில்
அழகான வண்ண வண்ண ஓவியங்கள்.
எல்லாப் பெருமையும் செம்மொழி மாநாட்டுக்கே.

தமிழின் தொன்மை;
தமிழகத்தின் கலாசாரச் சிறப்பு;
தமிழ்நாட்டின் வளர்ச்சி;
தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதம்;
தமிழர்தம் விவசாய ஆற்றல்;
தமிழர்தம் கலையுணர்வு;
தமிழர்தம் தொழில் சிறப்பு;
எல்லாம் வெளிப்படுத்தும் சுவர் ஓவியங்கள்.
எல்லாப் பெருமையும் செம்மொழி மாநாட்டுக்கே.

சுவர்கள் தென்படும் இடங்களில் எல்லாம் ஓவியங்கள்.
பார்க்கவே அழகாக இருக்கிறது.
வெளியூர்களில் இருந்து வரும் மக்கள்
பார்த்தால் மயங்கிவிடுவார்கள்.
எல்லாப் பெருமையும் செம்மொழி மாநாட்டுக்கே.

ஆனால்-
இடையிடையே,
வேலா முற்கள் படர்ந்த வயல்வெளிகள்;
கதவடைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் சிதிலங்கள்;
மூடப்பட்ட நூற்பாலைகளின் செங்கல் பெயர்ந்த சுவர்கள்.
இந்த இடங்களில் மட்டும்
ஓவியம் வரைய முடியவில்லை.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்?
நன்றி: விஜயபாரதம் (02.07.2010)
.

1 comment:

அன்புடன் நான் said...

கவிதை நச்!
வாழ்த்துக்கள்.

Post a Comment