Thursday, July 1, 2010

புதுக்கவிதை - 101




பகல் நனவு






முன் எப்போதோ
குடியிருந்த வீடு
இருந்த இடத்தில்
கட்டாந்தரையும்
கள்ளிச் செடிகளும்.

முன் எப்போதோ
பணியாற்றிய ஆலை
இருந்த இடத்தில்
வெற்று மைதானமும்
வேலி முற்களும்.

முன் எப்போதோ
குளித்த ஆறு
இருந்த இடத்தில
மணற்பள்ளங்களும்
சாக்கடைச் சேறும்.

பகல் கனவு
பலிக்காது தான்.
பகலில் காணும் நனவு?
.

No comments:

Post a Comment