Friday, July 23, 2010

புதுக்கவிதை - 104



தற்காலிகக் குடில்



நதியை தூய்மைப்படுத்த
ஆயிரம் கோடியில் திட்டம்.
கரையோரக் குடிசைகள்
உடனடியாக அகற்றம்.

அதே இடத்தில் அழகிய
படித்துறை, படகுத்துறை
அமைக்க வரைபடம் தயார்.
ஒப்பந்ததாரரும் ஏற்கனவே தயார்.


நதிக்குள் வந்துவிழும்
சாக்கடைக் கழிவுநீரை
தடுத்துவிட்டால் போதும்.
துவக்கிவிடலாம் திட்டம்.

அதுவரை -
வாங்கிய படகை வைக்க
கரையோரமே ஒரு குடில்
அமைத்தல் போயிற்று...
.

No comments:

Post a Comment