Sunday, July 18, 2010

மரபுக் கவிதை - 102




பேதம் வேண்டாம்!





பல மொழிகள் கற்றிட வேண்டும்- நமது
பாரத நாட்டினை அறிய
கலகம் மொழியினில் வேண்டா- நல்ல
காவிய ஒற்றுமை படைப்போம்!

வலிவுறு நாட்டினைப் படைக்க - மக்கள்
வாழ்க்கையில் ஒற்றுமை தேவை.
நலிவுறும் தேசத்தைக் காப்போம்- இந்த
நானிலம் வியந்திடச் செய்வோம்!
.
குறிப்பு: மொழிவாரி மாநிலப் பிரிவினையின் கொடுமையான பின்விளைவே, இன்றைய ஆந்திரா- மகாராஷ்டிரா மோதலுக்கு காரணம். மொழிப்பற்று, சுயநல அரசியல்வாதிகளின் ஆயுதமாகிவிடக் கூடாது. இதுவே எனது வேட்கை.
.

No comments:

Post a Comment