Saturday, July 3, 2010

படக் கவிதை - 03


விடுதலை

இன்னும் சிறிதுநாள் தான்
இந்தத் தொல்லை.
பிறகு நிரந்தர விடுதலை.
விழி பிதுங்கி,
நுரை தள்ளி,
பட்டினி உடம்பில்
சாட்டையடி வாங்கி,
கண்டவனுக்கும் உழைக்கும்
கஷ்ட காலம்
விரைவில் விடைபெறும்.
அடிமாடாக மாறிவிட்டால்
காளைமாட்டுத் துயரம்
காணாமல் போய்விடாதா?

.

No comments:

Post a Comment