Wednesday, July 7, 2010

உருவக கவிதை - 51


பந்தின் வாழ்க்கை



மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும்
உருண்டோடுகிறது பந்து.
எதிரெதிர் அணியினர் கால்களிடையே சிக்கி
அங்குமிங்கும் அலைபாய்கிறது பந்து.
காலால் உதைத்தாலும் தலையால் முட்டினாலும்
எம்பிப் பாய்கிறது காற்றடித்த பந்து.
உதைக்கும் கால்களுக்கு வெற்றியைத் தர
சுயவிருப்பம் இன்றிச் சீறுகிறது பந்து.
ஏதாவது ஒரு இலக்கை எட்டும்போது
அரங்கை அதிரவைக்கிறது பந்து.
விளையாட்டு முடியும் வரை
ஓய்வின்றி உருளுகிறது பந்து.
எல்லாம் ஒரு போட்டி நேரம் வரை.

பிறகு -
மாற்றப்படும் வேறு பந்து.
.

No comments:

Post a Comment