
எரிமலைகள் அணைவதில்லை
குண்டு மழைகளால்
எரிமலையின் சீற்றம்
அணைவதில்லை.
எரிமலையின் கொள்ளிவாய்
அமைதி காப்பது
அறியாமை இல்லை.
வெடிப்புக்கு காரணமாகும்
உள்அழுத்தத்தை
குண்டுமழை குறைப்பதில்லை.
வரலாறு புகட்டும்
பாடங்கள் என்றும்
வற்றுவதில்லை.
ஹிரண்யர்களும்
ராவணர்களும் என்றும்
பாடம் கற்பதில்லை.
அன்பு சாதிக்கும்
இடத்தில் அதிகாரம்
நுழைவதில்லை.
வெற்றி மமதையில்
மனிதர்களுக்கு
இவை புரிவதில்லை.
.
No comments:
Post a Comment