Tuesday, May 25, 2010

சிந்தனைக்கு


சான்றோர் அமுதம்


கடவுளை நான் என் கண்ணால் காணவில்லை. வேறு விதத்திலும் நான் கண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. உலகம் எல்லாம் நம்புகிறது, ஈசன் ஒருவன் இருக்கிறான் என்று. அந்த நம்பிக்கையைக் கொண்டு நானும் வாழ்க்கையைச் செலுத்துகிறேன். எனக்கு உண்டாகியிருக்கும் இந்த நம்பிக்கை அழிக்க முடியாத நம்பிக்கை. அழியாத நம்பிக்கை பிரத்யக்ஷ பிரமாணத்துக்கு சமமாகவே ஆகிவிடுகிறது. என்றாலும் எவ்வளவு உறுதியானதாயினும் ஒரு நம்பிக்கையை பிரத்யக்ஷமாக கண்டேன் என்று சொல்லுவது உண்மைக்கு மாறாகும். ஆனபடியால் என்னுடைய கடவுள் நம்பிக்கைக்கு சரியான ஒரு சொல்லை நான் காணவில்லை...
-மகாத்மா காந்தி.
(ரகுபதி ராகவ- பக்: 5)

No comments:

Post a Comment