Thursday, May 20, 2010

புதுக்கவிதை - 89



இறைமை - 2



கண்ணில்லாப் பிச்சைக்காரன்
காது கேளாத ஊமை
கால் வளைந்த முடவன்
கூன் விழுந்த கிழவி
எல்லோரும் கோயில் வாசலில்.

கைவிடப்பட்ட முதியோரும்
தீரா நோயாளிகளும்
சவரம் செய்யாத முகங்களும்
காத்திருக்கின்றன
மலைக் கோயில் படிகளில்.

சிக்குப் பிடித்த தலையுடன்
உளறியபடிச் செல்லும்
கந்தலாடை பித்தனும்
உச்சிக்கால பூஜை மணிக்காக
பரபரக்கிறான்.

படிகளில் தாவி இறங்குகிறது
குழந்தை-
அம்மா சொன்னபடி
சில்லறைகளைப்
போட்டபடி.

நன்றி: ஓம் சக்தி (ஆகஸ்ட்- 2010)
.
..

2 comments:

VELU.G said...

நன்றாக உள்ளது

வாழ்த்துக்கள்

சுஜா செல்லப்பன் said...

அருமையான கவிதை...

Post a Comment