Friday, May 21, 2010

புதுக்கவிதை - 90



இறைமை - 3


நிமிர்ந்து நிற்கும்
நெடுங்குன்றம்;
ஆழ்கடலின்
வேக அலைகள்;
அலைகளில் ஊடுருவும்
எடையற்ற படகு;
ஆவேசமாய் ஆடும்
மரக்கிளைகள்;
கொம்பைப் பிடிக்கத்
தாவும் கொடி;
காலையில் வீசும்
பூவின் சுகந்தம்;
பூக்களில் புரளும்
மகரந்தத் தேனீ;
தத்தி நடக்கும்
சிசுவின் சிரிப்பு...
அனைத்திலும் இருக்கிறது
இறைமை.
இல்லை என்பது மடமை.
.

No comments:

Post a Comment