Monday, May 17, 2010

சிந்தனைக்கு

பாரதி அமுதம்

செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே- எங்கள்
(செந்தமிழ்)...
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு....
-மகாகவி பாரதி.
***
தமிழ்த் தாய்

ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்பொடுநித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே -உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்....

தந்தை அருள்வழி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கனமட்டுங் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.
இன்றொரு சொல்லினைக் கேட்டேன்! - இனி
ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்! ...
-மகாகவி பாரதி.

No comments:

Post a Comment