Sunday, October 3, 2010

உருவக கவிதை- 63





சங்கேத வாழ்க்கை





நாட்குறிப்பு ஏடெங்கும்
சங்கேதக் குறிப்புகள்.
சென்ற ஆண்டின் நாட்குறிப்பைப் புரிய
சென்ற ஆண்டே செல்ல வேண்டும்.
இந்த ஆண்டின் நாட்குறிப்பும்
அடுத்த ஆண்டு குழப்பக் கூடும்.
வரும் ஆண்டேனும்
தெளிவான சங்கேதங்களை
புரிவதுபோல
எழுத வேண்டும்.
.

No comments:

Post a Comment