Friday, December 3, 2010

உருவக கவிதை - 68


லஞ்சம்,
ஊழலுக்கு
நான் என்றும் நெருப்பு

நீ என்ன பருப்பா என்று கேட்பவர்கள்
எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.
அவர்களுக்காக வாழ்வதே எனது விருப்பு.

நான் பருப்பு இல்லையென்றாலும்
லஞ்சம், ஊழலுக்கு என்றும் நெருப்பு.
ஆணவ அரசியலை எதிர்க்கும் துருப்பு.
எழுத்தே தான் என்றும் எனது இருப்பு.

நான் வெறும் பருப்பு தான் என்றாலும்
ஆணவ அரசியலுக்கு என்றும் நெருப்பு.
தேய்ந்தாலும் பாதம் காக்கும் செருப்பு.
என் உள்ளத்தில் இல்லை கருப்பு.

நான் பருப்பு என்றாலும் இல்லையென்றாலும்
அறிந்திருக்கிறேன் என் பொறுப்பு.
நாசக்காரர்களுக்கு காட்டுவேன் வெறுப்பு.
கபடதாரிகளுக்கு என்றும் கூறுவேன் மறுப்பு.

நானே கேள்வி கேட்டு நானே எழுதிய பதில்
நன்றாக இருக்கிறதா?
இது தானய்யா கவிதையின் பிறப்பு!
இதை வெளியிடுவது ஊடகங்களுக்கு சிறப்பு!
.

1 comment:

எஸ்.கே said...

மிக நன்று!

Post a Comment