Sunday, December 26, 2010

உருவக கவிதை - 70


திருட்டு ராசாக்கள்
.
திருடன்... திருடன்... திருடன்...
கத்திக்கொண்டு ஓடுகிறான்
திருடும்போது சிக்கிய திருடன்...
.
கூட்டாய்த் திருடி உதை வாங்குபவனை
கைவிடவும் காப்பாற்றவும் ுடியாமல்
தவிக்கிறான் சக திருடன்.
.
சிக்கியவன் வாய் திறக்கும் சமயம்
'பொதுமாத்து' தருகிறான்
தப்ப எத்தனிக்கும் திருடன்.
.
பிடித்துக் கொடுத்தவர்களையே
திருட்டுக்கு உதவியதாக
வாக்குமூலம் கொடுக்கிறான் திருடன்.
.
குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது
நீதிபதி மீதும் பாய்கிறான் -
நீங்களும் திருடனென்று.
.
திருடனின் ஜாதியைக் காட்டி
இயன்றவரை நியாயப்படுத்துகிறான்
திருட்டுக் கும்பல் தலைவன்.
.
இத்தனைநாள் வாங்கிய
திருட்டுப்பொருளை மறந்து
கைவிடுகிறான் கூட்டாளிகளின் தலைவன்.
.
திருடன்... திருடன்... திருடன்...
துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்...
பலநாள் கூட்டாளிகளும் 'உடன் பிறந்த' சகாக்களும்...
.
குறிப்பு: ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இக்கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
.

No comments:

Post a Comment