Saturday, December 25, 2010

எண்ணங்கள்

நல்ல முயற்சி...
வலைப்பதிவர்கள் கூடுவது மகிழ்ச்சி!

நாளை (26.12.2010) ஈரோட்டில் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது. ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் ஏற்பாடு செய்துள்ள பதிவர்கள்- வாசகர்கள் சங்கமம்- 2010' நிகழ்ச்சி, வலைப்பூக்களில் கருத்துமழை பொழியும் அன்பர்களுக்கு அரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை.
.
ஈரோடு டைஸ் அண்ட் கெமிகல்ஸ் கட்டடத்தில் (யு.ஆர்.சி.நகர், பரிமளம் மஹால் பஸ் நிறுத்தம், பெருந்துறை சாலை, ஈரோடு) நாளை (26.12.2010) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வலைப்பதிவர் சந்திப்பில் சிந்திப்போம். நமது கருத்துக்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொள்வோம்!

பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் செல்வாக்கு மிகுந்தவர்களின் கைப்பாவையாகிவிட்ட சூழலில் இணையமும் வலைப்பூக்களும் மாற்று ஊடகங்களாகி விட்டன. யாரும் தனது கருத்தை சுதந்திரமாக முன்வைக்கும் வாய்ப்பை வலைப்பூக்கள் ஏற்படுத்தியுள்ளன. கருத்து சுதந்திரத்தின் கட்டற்ற வெளியை வலைப்பூக்களும் இணையமும் சாத்தியமாக்கி உள்ளன. ஆயினும், இந்த சுதந்திரம், வலைப்பூக்களில் எழுதுவோருக்கு சுய கட்டுப்பாடு தேவை என்பதையும் நினைவு படுத்துகின்றன.
வலைப்பூ பதிவர்களும் வாசகர்களும் அவ்வப்போது சந்தித்து உரையாடுவது, வலைப்பூக்களின் தரம் உயர வழி வகுக்கும். நாட்டிற்கும் சமூகத்திற்கும் உதவும் வகையில் நமது வலைப்பூக்கள் மெருகேற, பதிவர்கள்- வாசகர்கள் சங்கமம்' உதவட்டும்.
.

No comments:

Post a Comment