Monday, December 6, 2010

சிந்தனைக்கு


பாரதி அமுதம்

.
தெய்வம் பலப்பல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்- எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார், -நித்தம்
திக்கை வணங்குந் துலுக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்-

யாரும் பணிந்திடும் தெய்வம், -பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குளே தெய்வம் ஒன்று; -இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்....

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக்கெல்லாம் முதலாகும் - ஒரு
தெய்வம் துணை செய்ய வேண்டும்.
-மகாகவி பாரதி
(முரசு)
.

No comments:

Post a Comment