Wednesday, March 23, 2011

எண்ணங்கள்


முட்டுச்சந்தில் தவிக்கும் தமிழகம்


தமிழகத்தில் தேர்தல் களை கட்டிவிட்டது. ஆனால், கொள்கையை விற்ற கூட்டணிக் குழப்பங்களால் வாக்காளர்கள் திகைப்படைந்திருக்கிறார்கள். அவர்களது வாக்குகளை தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் ஆளும்கட்சியே விலை பேசி இருக்கிறது.
.
மற்றொரு புறம், முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் இருமாதகால அரசியல் துறவறம் பூண்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் உயிர்பலி கூட இங்கு அரசியல் லாபத்திற்குரிய விஷயமாக மட்டுமே முன்வைக்கப்படுகிறது.
.
இந்நிலையில் வாக்காளர்களைத் தெளிய வைக்கும் முயற்சியாக, மூத்த அரசியல் தலைவர் திரு. பழ.நெடுமாறன் எழுதிய கட்டுரை இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரை உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டியது.
.
(தினமணி- 23.03.2011)
.
பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் தனது வலைப்பூவில் எழுதியுள்ள கட்டுரையும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரத்தை அலசுகிறது. இக்கட்டுரையும் சிறிது தெளிவை அளிக்கிறது.
.
(எழுதுகோல் தெய்வம்- 23.03.2011)
.
குழப்பத்திற்குப் பிறகு தெளிவு பிறக்குமானால், தமிழகத்திற்கு நல்லது. இல்லாவிடில், ஜனநாயக சோதனைச்சாலையில் மேலும் சில ஆண்டுகளுக்கு நாம் சோதனைக்கு ஆட்பட வேண்டியதுதான்.

No comments:

Post a Comment