Thursday, March 17, 2011

உருவக கவிதை - 63


எழுதப்படாத கவிதை...


நான் எழுதாத எதையும்
நான் எழுதியதாக
நானே சொல்லிக் கொள்வதில்லை.

நான் எழுதாத எதையும்
நான் சொந்தம் கொண்டாடுவதில்
என்ன பயன் இருக்க முடியும்
எனக்கு நானே சொறியும் இன்பம் தவிர?

கலைஞரின் இளைஞனும்
உளியின் ஓசையும்
நான் எழுதியது என்று சொன்னால்
சிரிக்கத்தான் போகிறீர்கள்.

நான் எழுதவில்லை என்றாலும்
சிரிக்காமல் சிரிப்பீர்கள்.
பிறகு எதை எழுதி
என்ன ஆகப் போகிறது?

எங்கு போனாலும்,
எதையாவது கிறுக்கி
எப்படியாவது வெளிப்படுத்தி
எங்கேயாவது பிரசுரமானாலும்
நகலெடுக்கும் நண்பர்கள்
இருக்கவே செய்கிறார்கள் என்னை மாதிரி.

ஒன்று தெரியுமா?
உளியின் ஓசைக்குத் தான்
கல்லின் வலி தெரியும்.
நகல் எடுப்பதும் எடுப்பிப்பதும்
ஒன்றல்ல தெரியுமா?

ஒன்று மட்டும் உறுதி-
இந்தக் கழுதையும்கூட
நான் எழுதியதில்லை.
நான் எழுதவே இல்லை.
.

No comments:

Post a Comment