Friday, February 18, 2011

எண்ணங்கள்


முதுகெலும்பு உள்ளவர்களா நாம்?

சில தினங்களுக்கு முன் நமது மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் தொலைகாட்சி சானல்களின் ஆசிரியர்களுடன் நிகழ்த்திய நேர்காணல் அனைத்து ஆங்கில செய்தி சானல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், கார்கில் குடியிருப்பு ஊழல், இஸ்ரோ ஊழல், வடகிழக்கு மாநிலங்களில் ஊழல், என்று எங்கு திரும்பினாலும் ஊழல் மயமாகக் காட்சியளிக்கும் தற்போதைய மத்திய அரசு மீதான அவநம்பிக்கையைப் போக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நேர்முகம், ஒரு அமெச்சூர் நாடகம் போலவே காட்சி அளித்தது.

பிரதமருக்கு வலிக்கக் கூடாது; அதே சமயம் தங்கள் நம்பகத் தன்மையையும் இழந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பத்திரிகையாளர்கள் பட்ட பாட்டை தொலைக்காட்சியில் பார்த்தபோது, கோபம் தான் வந்தது. ஊழல் செய்தவரும் அவர்களைக் காப்பற்றியவருமான ஒரு பிரதமர் முன்னால் இப்படி பத்திரிகையாளர்கள் குழைய வேண்டியது அவசியம் தானா?

சலசலக்கும் ஊழல்களால் நாடு முழுவதும் பரவலாக மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், மத்திய அரசின் ஊழல்கள் குறித்து நெஞ்சத் துணிவுடன் கேள்வி கேட்கவும் அங்கு ஒருவர் கூட இல்லையா? ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களின் வீழ்ச்சி மன்மோகன் சிங்கின் வீழ்ச்சிக்கு சற்றும் குறைந்ததல்ல.

இந்த சந்திப்பு குறித்து 2 எதிர்ப் பதிவுகளைக் கண்டேன். அவை, ஆங்கில ஊடக பத்திரிகையாளர்களுக்கு முதுகெலும்பு வளைந்தாலும், நாட்டு மக்களுக்கு இன்னும் முதுகெலும்பு உறுதியாகவே உள்ளன என்பதைக் காட்டின.

ஒன்று, தமிழ் ஹிந்து இணைய தளத்தில் திரு விஸ்வாமித்ரா எழுதிய கட்டுரை. அடுத்தது, தினமணி தலையங்கம். இவை அனைவராலும் படிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் எந்த மாதிரியான காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதை உணர முடியும். அவற்றின் இணைப்பு சுட்டிகள் கீழே...

மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப்படாத கேள்விகள்
- விஸ்வாமித்ரா - தமிழ் ஹிந்து (17.02.2011)

தலையங்கம்:%20பிரதமரின்%20சப்பைக்கட்டு!'>பிரதமரின் சப்பைக்கட்டு தலையங்கம்:%20பிரதமரின்%20சப்பைக்கட்டு!'>
- தினமணி தலையங்கம் (18.02.2011)
.

1 comment:

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Post a Comment