Thursday, February 3, 2011

எண்ணங்கள்



அறம் கூற்றாகும்... சிறுகதையும் ஆகும்


எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியுள்ள "அறம்'' சிறுகதை, அற்புதம். வாழ்வின் அனர்த்தத்தையும் அர்த்தத்தையும் ஒருசேரச் சொல்லும் அரிய கதை.

அரசியல் பிழைத்தோர்க்கு மட்டுமல்ல, தவறு செய்யும் அனைவருக்குமே அறம் கூற்றாகும். அந்த பயம் தான் குடும்பத்தைக் காக்கிறது; நாட்டையும் காக்கிறது என்பதை முகத்தில் அறைந்ததுபோலச் சொல்கிறது ''அறம்'' சிறுகதை. ஜெயமோகனின் இலக்கிய உலகில் இக்கதை முத்திரைக்கதை எனலாம்.

இக்கதையை அனைவரும் படிக்க வேண்டும். அப்போதுதான் அறத்தின் பயனையும் துணையையும் உணர முடியும். படியுங்கள்... உங்கள் கண்களிலும் கண்ணீர் வரும்.
.
கதையின் இணைப்பு: அறம்
கதை குறித்த எனது கருத்து: அறம், மேலும் கடிதங்கள்
..

No comments:

Post a Comment