Friday, November 26, 2010

வசன கவிதை - 83


அந்த 20 நாட்கள்...


கவிதை தான் வாழ்க்கை என்று முழங்கியவன்
ஒரு இருபது நாட்களுக்கு காணாமல் போனால்,
வாழ்க்கை காணாமல் போயிருந்ததா
என்று கேட்கக் கூடாது.

ஒருவேளை அவன் உண்மையிலேயே
வாழ்க்கையை வாழச் சென்றிருக்கலாம்.

அப்படியானால் வெற்று முழக்கம் எதற்கு
என்று கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது.
ஒருவேளை அவன் உண்மையிலேயே
கவிதையும் எழுதச் சென்றிருக்கலாம்.

எதற்கு இந்த மழுப்பல் என்று
ஏளனம் செய்யாதீர்.
மறுபடியும் ஒரு இருபது நாட்களுக்கு
காணாமல் போய்விடவும் வாய்ப்புண்டு.

அப்புறம் தமிழை யார் காப்பதாம்?
.

No comments:

Post a Comment