Monday, November 29, 2010

புதுக்கவிதை - 137


உயிரபிமானம்


தாவரங்களுக்கும்
உயிருண்டு என்றவர்
பாரதத்தின் ஜெகதீச சந்திரர்.

வாடிய பயிரைக்
கண்டவுடன் வாடியவர்
அருளாளர் வள்ளலார்.

புல்லைப் பூடாய் மரமாகும்
உயிரின் பரிணாமத்தை
பாடியவர் மணிவாசகர்.

எல்லாம் தெரிந்தாலும்
மரத்தை வெட்டுவதில்
யார்க்கும் ஈடில்லை நாம்.

மனிதாபிமானம் பேசியபடி
கழுத்தறுப்பவர்களிடம்
எதிர்பார்க்கலாமா உயிரபிமானம்?
..

1 comment:

சம்பத்குமார் said...

கவிதை அருமையாக இருக்கிறது அன்பரே

Post a Comment