Saturday, November 6, 2010

வசன கவிதை- 82


தீபாவளி - 7

ஊர் முழுவதும் பட்டாசு சத்தம்.
பதுங்குகுழி அனுபவத்தால்
வீட்டிற்குள் பதுங்குகிறது,
ஈழத்தமிழ்க் குழந்தை.

வானெங்கும் வண்ணச் சிதறல்கள்.
பரிதாபமாகப் பார்க்கின்றன
சொந்தங்களை இழந்த முகங்கள்.

முகாமில் விநியோகிக்கப்பட்ட
அளவு பொருந்தாத ஆடைகளுக்குள்
திணறுகிறது முகாம் தீபாவளி.
.k.

2 comments:

ஜோதிஜி said...

திருப்பூர் நண்பருக்கு என் வாழ்த்துகள்.

சத்ரியன் said...

வலி.

Post a Comment