Sunday, January 17, 2010

மரபுக் கவிதை - 68






ஈசன் அருள்க!



மேகம் பொழிவதைத் தடுத்திடல் இயலும்?
மின்னல் ஒளிர்வதைத் தடுத்திடல் இயலும்?
தேகம் அழிவதைத் தடுத்திடல் இயலும்?
தென்றல் வருடலைத் தடுத்திடல் இயலும்?
வேகம் செறிந்த கவிஞனின் குரலை
வெற்றுச் செவிகள் புதைத்திட இயலும்?


தாகம் இல்லா மீனைப் போல
தளரா உழைப்பைத் தஞ்சம் கொள்க!
சோகம் கொண்டிட வேண்டாம் மனமே
சொந்தம் கொண்டிட இறைவன் உள்ளான்!
ஏகன் அநேகன் இறைவன் அருளால்
எல்லா நலமும் எங்கும் விளையும்!



.

No comments:

Post a Comment