Sunday, January 10, 2010

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தேமாதரம்! வந்தேமாதரம்!
சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!
அதிரத மன்னர்காள்! துரகதத் ததிபர்காள்!
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!...
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெல்லாம் திருவருள் புரிக!
மாற்றலர் தம்புலைநாற்றமே யறியா
ஆற்றல்கொண் டிருந்ததிவ் வரும்புகழ் நாடு!
வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரததேவி?...
.
-மகாகவி பாரதி
(சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது)

.

No comments:

Post a Comment