Sunday, January 24, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்


வரலாற்றிற்கு முன்பு வர்க்கங்கள் இல்லை. வரலாற்றுக் காலத்தில் தான் வர்க்க உணர்விற்கு இடம் கொடுத்தோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இயற்கையோடும் பிரபஞ்சத்தொடும் சமூகத்தோடும் இணைந்திருந்தோம்....இப்படி எல்லாவற்றையும் ஒன்றெனக் கண்ட பேருணர்வை நாம் இழந்துவிட்டோமா? இல்லை. வர்க்க வகைப்பட்ட உணர்வுக்கடியில் அந்தப் பேருணர்வு இருக்கத்தான் செய்கிறது... முதலாளியும் அன்னியப்பட்டவன். சமுதாயத்தில் நிலவும் பொருளியல் சூழலுக்குள் மாட்டிக் கொண்டவன். அவனுக்கும் சேர்த்துத்தான் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும். .. கலைஞனுக்குள் பெருகுவது இந்த அன்பு... சித்தாந்தம் என்னும் வரையறைக்குள் அவன் அகப்படுவதில்லை... கம்பனுக்குள்ளும் பாரதிக்குள்ளும் பொங்குவது இந்த ஊற்று தான். அரசியலதிகாரத்தை முதன்மைப் படுத்துபவருள் இந்த ஊற்று வறண்டு விடுகிறது. தனக்குள்ளிருந்து அதிகாரத்தை வெளியேற்றிக் கொண்டவர்க்கு இந்த ஊற்று தட்டுப்படும்.

-கோவை ஞானி
(மார்க்சியத்திற்கு அழிவில்லை: பக்:123)

.

No comments:

Post a Comment