Saturday, January 9, 2010

ஏதேதோ எண்ணங்கள்



வருத்தமான செய்தி


தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் புதுமையுடன் நடுநிலை மிகு பத்திரிகையாகவும், பாரம்பரியச் சிறப்பு, பாரதப் பண்பாடு காக்கும் விளக்காகவும் கடந்த 20மாதங்களாக வெளியான 'வார்த்தை' மாத இதழ் இந்த மாதம் வரவில்லை. விசாரித்தபோது, நின்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். வருத்தமாக உள்ளது.
ஆசிரியர் குப்புசாமியின் அனுபவக் கட்டுரை, இணையாசிரியர் சிவகுமாரின் துலாக்கோல் தலையங்கம், கோபால் ராஜாராம், துக்காராம் கோபால் ராவ் ஆகியோரின் கருத்துள்ள ஆய்வுக் கட்டுரைகள், சுகாவின் ரசனை, என அதன் பல அம்சங்களும் இனிமையான நினைவலைகளை எழுப்புகின்றன. என்ன காரணத்தால் பத்திரிகை நின்றது எனத் தெரியவில்லை.
குப்பை பத்திரிகைகள் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டும் தமிழகத்தில், தரமான 'வார்த்தை' தடுமாறியது, தமிழின் சாபக்கேடு தானோ?
-வ.மு.முரளி.

.

No comments:

Post a Comment