Sunday, January 3, 2010

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


இளைஞர்களே என் நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்புக்கு செவி சாய்ப்பீர்களா? என்னை நம்புவதற்கான துணிவு உங்களிடம் இருக்குமானால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொன்னான எதிர்காலம் இருக்கும்...
அசைக்கக் முடியாத நம்பிக்கையை உங்களிடம் நீங்கள் கொள்ளுங்கள். அத்தகைய மகத்தான நம்பிக்கையை, ஒவ்வோர் ஆன்மாவிலும் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டீர்களானால், இந்திய முழுவதையும் நீங்கள் புதுப்பித்து விடலாம். அதன் பிறகு ஒவ்வொரு நாட்டிற்கும் போவோம். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் உருவாக்குகின்ற பல சக்திகளுள் ஒன்றாக நமது கருத்துகளும் விளங்கும். இந்தியாவிலும் வெளியிலும் இருக்கின்ற ஒவ்வோர் இனத்தின் வாழ்க்கையிலும் நாம் புக வேண்டும். இப்போது நாம் பாடுபட்டாக வேண்டும்.
-சுவாமி விவேகானந்தர்

.

No comments:

Post a Comment