Saturday, January 16, 2010

புதுக்கவிதை - 63


மனதில் துவர்ப்பு

நெஸ் காபி,
புரூ காபி...
விற்றபடி செல்கிறான்
ரயில்பயண வியாபாரி-
கழுநீர்த் தண்ணீர் என்றாலும்
காபித் தண்ணியாக.

************

'சூடான
சுவையான
கரம் மசாலா டீ'
கேட்கும்போதே
நாவின் மனக்கண்ணில்
சுவை விரிகிறது.
குடித்தபின் படர்கிறது-
நாவில் வெறுப்பும்
மனதில் துவர்ப்பும்.

.

No comments:

Post a Comment