Sunday, January 10, 2010

மரபுக் கவிதை - 63


ஜய ஜய பவானி!

ஜய ஜய பவானி! ஜய ஜய சங்கரி!
ஜய ஜய ஜய ஜய சாமுண்டேஸ்வரி!

வில்லினில் ஒலியென, விஜயத் திருவென,
இல்லினில் ஒளியென, இருட்பகை சிதறிட,
நின்றிடும் உமையவளே!
நின்னடி பணிகின்றோம்!
(ஜய ஜய)
நீதி நிலைத்திட, நியமம் காத்திட,
சாதி ஒழித்திட, சதிகளை வென்றிட,
உன்னருள் வேண்டுகிறோம்!
விண்ணவர் தலைமகளே!
(ஜய ஜய)
அன்புடன் அனைவரும் இன்புற வாழ்ந்திட,
'தன்'னெனும் ஆணவ மாயை அகன்றிட,
எம் மனம் ஏங்கிடுதே!
இன்னருள் தந்திடுவாய்!
(ஜய ஜய)
பாரதம் உயர்ந்திட, பண்புகள் ஓங்கிட,
சாரணர் போற்றிடு தர்மம் பரவிட,
ஆசி அளித்திடுவாய்!
ஈசனின் இருதயமே!
(ஜய ஜய)

நன்றி: விஜயபாரதம் (25.09.1998)

.

No comments:

Post a Comment